விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
விஜய் நடிக்கும் தலைவா படத்தில் முதலில் நாயகியாக கமிட்டானவர் அமலாபால்தான். ஆனால் அதையடுத்து விஜய்யின் மும்பை காதலியாக இந்தி நடிகை ஒருவர் கமிட்டானதால் ஆடிப்போனார் அமலாபால். அதனால் தன்னை ஓரங்கட்டப்பார்க்கிறாரே டைரக்டர் என்று மனசுக்குள் கோபித்துக்கொண்டு, அவரை விட்டு விலகியே நின்றார். அதோடு தலைவா படப்பிடிப்பு முடிந்ததும் அன்று இரவே தெலுங்கு படப்பிடிப்பு உள்ளது என்று சொல்லி ஐதராபாத்துக்கு பறந்து வந்தார். ஆனால் இப்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும்போது, இந்தி நடிகையின் சீன்கள் எதுவும் படமாக்கப்படவில்லையாம்.
அவருக்கு என்னாச்சு? என்று விசாரித்தபோது, அவர் விஜய்யின் மும்பை காதலியாக நடிப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பையோடு முடிந்து விட்டது. ஒரு பாடலும் சில காட்சிகளில் மட்டும்தான் அவர் வருவார் . படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விஜய்யுடன் வரப்போகிறவர் நீங்கள்தான் என்றும் சில உதவி இயக்குனர்கள் சொல்ல, புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார் அமலா. அதோடு, இதுவரை ஆஸ்தான டைரக்டர் விஜய் தன்னை இப்படி ஓரங்கட்டி விட்டாரே என்று உண்மை தெரியாமல் அவர் மீது அதிருப்தியில் இருந்து வந்த அமலாபால், தற்போது சகஜமாக பழகி வருகிறாராம். மேலும், முன்பு தான் தலைவா படத்தில் ஓரங்கட்டப்படுவதாக தனது நட்பு வட்டாரங்களிடம் புலம்பி வந்த நடிகை, இப்போது அவர்களுக்கு போன் போட்டு, தலைவா படத்தில் நான்தான் முதன்மை ஹீரோயினி என்றும் சொல்லி சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்.