ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்சேதுபதி-ரம்யா நம்பீசன் நடித்த படம் பீட்சா. இதில் பீட்சா கடையில் வேலைபார்க்கும் சாதாரண பையனாக நடித்திருந்தார் விஜயசேதுபதி. படமும் எதிர்பாராத வெற்றியை சந்தித்தது. இதனால் அதையடுத்து விஜயசேதுபதியின் மார்கெட் எகிறி நிற்கிறது. பெரிய டைரக்டர், பெரிய கம்பெனி என்பதைவிட, வித்தியாசமான கதைகளுக்கே அவர் முக்கியத்துவம் கொடுப்பதால் வித்தியாசமான கதைகளுடன் இயக்குனர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் அரை டஜன் படங்களில் தற்போது கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது சூதுகவ்வும் படத்தை முடித்து விட்ட அவர், பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பீட்சா படத்தின் இரண்டாம் பாகத்தையும அதேநிறுவனம் தயாரிக்கிறது. அதில் நடிக்க வைபவ், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் புக்காகியிருந்தனர். ஆனால் இப்போது, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அப்படத்தில் நன்கு பரிட்சமான நடிகர் நடித்தால் படத்தின் வியாபாரத்துக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து, வைபவ், சஞ்சிதா ஷெட்டியை நீக்க முடிவு செய்திருக்கிறார்களாம். இதையடுத்து பில்லா-2வில் அஜீத், சிங்கம்-2வில் சூர்யா என முதல் பாகத்தில் நடித்த ஹீரோக்களே இரண்டாம் பாகங்களிலும் நடிப்பதால், மீண்டும் விஜய சேதுபதியிடமே கால்சீட் கேட்டுள்ளார்களாம். ஆனால் தற்போது படுபிசியாக இருக்கும் அவர் தனது முடிவை இன்னும் தெரிவிக்கவில்லையாம். என்றாலும் அவசியம் நடிப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.