கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
பொதுவாக திரைப்படங்களுக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவேளை விடுவார்கள். தியேட்டர் கேண்டீன் விற்பனைக்காக இந்த இடைவெளி விடப்படுகிறது. ஆனால் லியோ படத்தின் நீளம் இரண்டேமுக்கால் மணி நேரம். ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட வேண்டும். இதை கருத்தில் கொண்டு லியோ படத்திற்கு இடைவேளை நேரத்தை குறைக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
'லியோ' சினிமா சிறப்புக்காட்சிகள் நேரம் தொடர்பான பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். பின்னர் சங்கச்செயலாளர் வி.டி.எல்.சுப்பு நிருபர்களிடம் கூறியதாவது: நாளையில் இருந்து 6 நாட்களுக்கு சிறப்பு காட்சியாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்த முதல் அமைச்சருக்கு நன்றி. பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில்தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கும்.
லியோ படம் பெரிய படம் என்பதால் இடைவேளை நேரத்தை 5 நிமிடமாக குறைக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழக அரசு சொன்னபடி காலை 9 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளையும் முடித்துவிடுவோம். ஏற்கனவே முன்பதிவை தொடங்கி விட்டோம். இனி அதை மாற்ற முடியாது. அதனால் 9 மணிக்கு காட்சியை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
19ம் தேதியன்று (நாளை) மட்டும் இன்னும் முன்பதிவு செய்யவில்லை. அன்றைய தினம் அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். அரசு கொடுத்த நேரத்தின்படி படத்தை ஓட்ட தயாராகி விட்டோம். 5 காட்சிகள் திரையிடப் போகிறோம். தயாரிப்பாளர்கள் தரப்பில் காலை 7 மணிக்கு படத்தை தொடங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை 9 மணிக்கு தொடங்குவதில் என்ன வித்தியாசம் உள்ளது. காலை 9 மணி என்ற அளவில் முன்பதிவு டிக்கெட் கொடுத்துள்ளோம். அதை மாற்றுவது சரியாக இருக்காது. பிரச்னை வரும். ஆனாலும் அரசு என்ன அனுமதி கொடுக்கிறதோ அதை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.