ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் பாலாவின் படமென்றால், கடினமாக உழைக்க வேண்டும். இரவு பகல் பாராது அவர் எப்போது படப்பிடிப்பு வைத்தாலும் கலந்து கொள்ள வேண்டும். முக்கிய நடிகர், நடிகையர்கள் அவர் படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரைக்கும் வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இதற்கு உடன்படும் நடிகர், நடிகைகளுக்குத்தான் அவர் சான்ஸ் கொடுப்பார். அப்படித்தான் பரதேசி படத்தில் நடித்த அதர்வா, தன்சிகா, வேதிகா ஆகியோர் கமிட்டாகினர். அதன்படி அப்படத்தின் படப்பிடிபபு நடைபெற்ற ஒரு வருடமும் அவர்கள் எந்த படத்திலும் நடிக்காமல், பரதேசிக்காக அவுட்டோர்களில் முகாமிட்டு நடித்து வந்தனர்.
அந்த வகையில், மூணாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பல நாட்களாக படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் பாலா. அப்போது மரம் செடி கொடிகளுக்கு நடுவே நீந்தி நடித்த வேதிகாவை பல இடங்களில் அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் குடித்து விட்டனவாம். அப்போதெல்லாம் வலியால் துடித்த அவருக்கு ஸ்பாட்டிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், அடுத்த நாளே படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வந்திருக்கிறார். இப்படி கஷ்டப்பட்டு நடித்த வேதிகாவின் உடம்பில் இப்போது பல இடங்களில் அட்டைப்பூச்சிகள் கடித்த தழும்புகள் உள்ளதாம். அதனால் அடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாவதற்கு முன்பு அந்த தழும்புகளை மறைக்க வேண்டும் என்று தற்போது பெங்களூரில் உள்ள ஒரு தோல் நோய் மருத்துவரிடம் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம் வேதிகா.