Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சஞ்சய்தத்துக்கு சிறை: ரஜினி பரபரப்பு அறிக்கை

22 மார், 2013 - 21:34 IST
எழுத்தின் அளவு:

1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பிரபல இந்தி நடிகர் சஞசய்தத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அனுமதியின்றி உயர்ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததும், அதனை சட்டவிரோதமாக அழித்ததும் நிரூபிக்கப்பட்டது. ஆயுத தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் அவரது 6 ஆண்டு தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. சஞ்சய்தத் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.

தற்போது அவர் இன்னும் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்துக்குள் சஞ்சய்தத் சரண் அடைந்து சிறைக்கு செல்ல இருக்கிறார். இந்த தீர்ப்பு குறித்தோ, அவரது நிலைமை குறித்தோ இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை. முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது:

எனது அருமை நண்பர் சஞ்சய்த்துக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. அவருக்கு இப்போது இருக்கும் ஒரே வழி மன்னிப்புக்கான மேல்முறையீடு. அது அவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கு நல்ல பரிகாரம் கிடைக்க வேண்டும். அவரது எஞ்சிய வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.இவ்வாறு ரஜினி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (77) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (77)

D.Michael - trichy,இந்தியா
30 ஆக, 2013 - 11:23 Report Abuse
D.Michael இந்த கமெண்ட்ஸ் எல்லாத்தையும் ரஜினி படிக்க வேண்டும் . உங்களை வாழ வைத்தது தமிழ்நாடு என்பதை மறக்க வேண்டாம்.
Rate this:
Nandhagopal - tamilnadu,இந்தியா
28 மார், 2013 - 12:04 Report Abuse
Nandhagopal ரஜினி உனக்கு ஏன் வேலை இல்லையா சினிமா மட்டும் இல்லாம இப்ப ரியல் எஸ்டேட் லயும் பூந்து விளையாடற அப்பறம் என்ன இதுக்கு நீ இப்ப அறிக்கை விடுற
Rate this:
senthilmurugan - aarumuganeri ,இந்தியா
26 மார், 2013 - 11:38 Report Abuse
senthilmurugan ஏப்ரல் 2 இல் நன்றாக ஏப்ரல் 1 ஐ காட்ட போகிறார்.
Rate this:
senthilmurugan - aarumuganeri ,இந்தியா
26 மார், 2013 - 11:37 Report Abuse
senthilmurugan சூப்பர் ஸ்டார் என்னும் பதவி உங்களுக்கு தான் என்று உங்களை நிர்பந்திக்கும் முன்னாள் , இந்நாள் ஆட்சியாளர்களிடம் மனஒப்பந்தம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் டம்மி பீஸ் அவர்களே , உலகமே தமிழை பார்த்து கொண்டிருக்கும் நாளில் உங்கள் கண்ணுக்கு மட்டும் எப்படி படாமல் போனது . ரசிகர்கள் கேட்டவுடன் ஒரே நாள் இரவில் அப்படியே மாறி உண்ணாவிரதம் என்கிரீர்களே. யாருக்கு ? 21 ம் தேதி ஓங்கி குரல் கொடுக்காமல் இனிமேல் யாருக்கு ? human rights commission report திருத்தியே ஆக வேண்டும் என்று அறிக்கை கூட இல்லையே. இனிமேல் யாருக்கு ? உங்கள் போலி நாடகத்துக்கு அளவே இல்லையா . மக்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இவரது 100 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை. அனால் சொல்லும் அளவுக்கு இவர் தமிழுக்கும், இந்தியாவுக்கும் எதுவும் செய்ய வில்லை. கமலை போல் சினிமாவும் வளர்ச்சிக்கும் பாடு பட்டவர் அல்ல. இது வரை ஒரு பொதுமேடை கூட தன செலவில் போட்டது கிடையாது. நேரடியாக அரசியலில் இறங்கினால் விஜயகாந்தை போல சொத்தை இழக்க நேரிடும் என்பதால் வாயினால் வடை சுட்டு வாழும் மனிதர்தான் நீங்கள். கமலின் தரமான படங்கள் தோல்வியடைய காரணமாக நாம் இருந்து விட்டோமே என்று மக்கள் உணர்திருந்த நேரத்தில் விஸ்வரூபம் பட பிரச்சனை வந்தது. மக்களும் படம் பார்த்தனர். ஆனால் நீங்கள் அறிக்கை விட்டதால் தான் மக்கள் பார்த்தாக உங்கள் வாயினால் வடை சுட்டு விட்டீர்கள். வ.வு. சி நினைத்து இருந்தால் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா போட்டு பெரும் பணக்காரராக வாழ்ந்துஇருக்கலாம், அனால் கடைசியில் வறுமையில் இறந்தார். யாருக்காக நாட்டுக்காக. பசும்பொன் , பெரியார் எல்லாம் தன பரம்பரை சொத்தை சமுகத்திற்கு செலவு செய்தனர். காமராஜர் கடைசி வரை மற்றவர்களுக்காக உழைத்தார். இப்படி இருந்த மண்ணில் நீங்கள் கமலுக்கு "இனிமேல் உங்கள் பணத்தை செலவு செய்யாதிர்கள்" என்று அட்வைஸ் செய்தது ஏன்? அவர் அன்று வீட்டை விட்டுஇருந்தாலும் அது சினிமாவின் வளர்ச்சி என்று உலகம் அறியும். கமல் அன்பே சிவத்தில் ஒரு வசனம் பேசுவார்: நீங்கள் பண்ணுற பாவம் எல்லாம் பண்ணிட்டு கடவுளுக்கு பணம் கொடுத்து விடுவிர்கள் என்று. அது உங்களை மனதில் வைத்து தான் எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது. "நான் ஈ" பட டைரக்டர் ஐ வீட்டு அழைத்து காபி மட்டும் கொடுத்து சில multimedia technique ஐ அவரிடமிருந்து காபி பண்ணி உருவானது தான் கோச்சடையான். காலேஜ் பசங்களிடம் project work கொடுத்து உருவானதுதான் இந்த படம் . படம் ரிலீஸ் ஆக போகும் நேரத்தில் நன்றாக நாடகம் ஆடுகிறார். உண்ணாவிரதத்தில் 10 நிமிடம் இதயத்தில் இல்லாமல் மூளையில் இருந்து பேச போகிறிர்கள். எதற்காக இலங்கை தமிழரை உங்கள் வியாபாரத்துக்கு பயன் படுத்துகிரிர்கள். இனிமேல் தமிழ் நாட்டிக்கு சினிமா காரர்கள் அரசியலுக்கும் வேண்டாம். அட்வைஸ்க்கும் வேண்டாம். கமலை கூடம்குளம் பிரச்சனையில் பேச வேண்டும் என்று யாரும் அழைக்க வில்லை. திருப்பூர் பனியன் மில்லை பற்றி கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை. அதே போல் கமல் இதில் கலந்து கொண்டு அவர் பெயரை அவர் கெடுக்க வேண்டாம். திருடனுக்கு 50% கொடுப்பார்கள் உடையவனுக்கு ஒன்னும் கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னது உண்மை என்றால் கமல் சொன்னது உண்மை என்றால் இதில் கலந்து கொள்ள கூடாது. தனி மனித வருமானத்திற்க்காக நடிகர் சங்கமும் துணை போக கூடாது. படம் நன்றாக ஓடினால் எப்படியும் இவர் வரி கெட்ட போவது இல்லை. அதற்க்கு ஏற்கெனவே உண்ணாவிரதம் இருந்தாச்சு. அவர் நம்மளை முட்டாளாக்குவதற்கு முன்னாள் நாம் அவரை முட்டாள் ஆக்கிவிடு வேண்டியதுதான். போடுங்கோ கோச்சடையானுக்கு கோவிந்தா......... கோவிந்தா ....... கோச்சடையானுக்கு கோவிந்தா. ..................
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
25 மார், 2013 - 23:02 Report Abuse
Vaal Payyan இங்கே போட்ட கமெண்ட்ஸ் எல்லாம் அவர் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் .. நாங்கள் எவ்வளவு வேதனை பட்டிருப்போம் என்று தெரியட்டும் ... தமிழர்களே தயவு செய்து இவர் படத்தை புறக்கணியுங்கள் ... ஆர்பாட்டம் ... கூச்சல் எதுவும் வேண்டாம் ... நடுங்கி விடுவார் பாருங்கள் இந்த வெள்ளி திரை வீரன் ...
Rate this:
மேலும் 72 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in