ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' |
1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பிரபல இந்தி நடிகர் சஞசய்தத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அனுமதியின்றி உயர்ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததும், அதனை சட்டவிரோதமாக அழித்ததும் நிரூபிக்கப்பட்டது. ஆயுத தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் அவரது 6 ஆண்டு தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. சஞ்சய்தத் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
தற்போது அவர் இன்னும் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்துக்குள் சஞ்சய்தத் சரண் அடைந்து சிறைக்கு செல்ல இருக்கிறார். இந்த தீர்ப்பு குறித்தோ, அவரது நிலைமை குறித்தோ இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை. முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது:
எனது அருமை நண்பர் சஞ்சய்த்துக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. அவருக்கு இப்போது இருக்கும் ஒரே வழி மன்னிப்புக்கான மேல்முறையீடு. அது அவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கு நல்ல பரிகாரம் கிடைக்க வேண்டும். அவரது எஞ்சிய வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.இவ்வாறு ரஜினி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.