மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
ஆதி, டாப்சி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள, புதிய தெலுங்கு படம், ஆந்திராவில் வெளியாகி, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு இசையமைத்தவர், இளையராஜா. இந்த படத்தின், பாடல்கள் ஹிட்டாகி, "சிடி விற்பனையில், பிளாட்டினம் டிஸ்க் பெற்றுள்ளது.இது தொடர்பான விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தபோது, இளையராஜா பேசுகையில்,"இந்த படத்தின் பாடல்களுக்கான இசையும், பின்னணி இசையும், நேரடியாக இசைக் கலைஞர்களை வைத்து, லைவாக, செய்யப்பட்டவை. சமீபத்தில் வெளிநாட்டில் நான், இசைக் கச்சேரியை நடத்தினேன். ஏராளமான இசைக் கலைஞர்கள், நேரடியாக பங்கேற்று, இசைக் கருவிகளை இசைத்தனர். ஆனால், இனிமேல், இசைக் கலைஞர்களை வைத்து, இதுபோன்ற கச்சேரியை யாரும் நடத்தப் போவது இல்லை. இயந்திரங்களுக்கு தான், இனி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.