சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
"பசங்க" பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா". விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா சூரிய நடிக்கிறார்கள். பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், கோர்ட் வழக்கு பிரச்னையால் நின்று போனது. அதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாண்டிராஜ் பேசியதாவது:
இந்தப் படத்தை பற்றி பல்வேறு வதந்திகள் கிளம்பி இருக்கிறது. அதற்கு விளக்கம் தர வேண்டியது என் கடமை. யுவன் சங்கர் ராஜாவால்தான் தாமதமாகிறது என்பதில் உண்மை இல்லை. அவர் சரியான நேரத்திற்கு பாடல்களை போட்டுக் கொடுத்தார். மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்காக இடையில் 15 நாள் எடுத்துக் கொண்டார் அவ்வளவுதான். படத்தில் ரெயில் ஒரு முக்கிய கேரக்டராக இருப்பதால் திருச்சி பொன்மலை ரெயில்வே ஸ்டேஷனில் ரெயில் வரும்போதெல்லாம் படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருந்தது. அதனால்தான் படம் தாமதம். அதற்கு நான்தான் காரணம்.
அடுத்து விமலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஈகோ பிரச்னைகள் என்றார்கள். அதுவும் தவறு. இரண்டுபேருமே தோழில் கைபோட்டு மாமன் மச்சினன் போல இருந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு இருவருமே நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.
அடுத்து இந்தப் படத்தில் நடிக்க ஒரு முக்கிய நடிகையை கேட்டதாகவும் அவருக்காக நான் காத்திருந்ததாகவும் சொன்னார்கள். அதுவும் தவறு. குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்த நடிகை ஒருவரை, அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் என்னிடம் சிபாரிசு செய்தார். நான் அவரிடம் கதை சொல்ல சென்றோது. எனக்கு பரீட்சை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வரும் வரை காத்திருக்க முடியுமா என்று கேட்டார். யாருக்காகவும் நான் காத்திருக்க மாட்டேன். நான் நட்சதிரங்களை நம்பி படம் எடுப்பவன் இல்லை. கதையை நம்பி படம் எடுக்கிறவன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அதன்பிறகுதான் லட்டு மாதிரி இரு ஹீரோயின்களை நடிக்க வைத்தேன். ஒரு வேளை ஹீரோயின் கிடைக்காவிட்டால் ஆணுக்கு பெண் வேஷம் போட்டு படத்தை முடித்து விடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.