ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகனான இவரை அந்த படத்துக்குப்பிறகு தனது படத்தில் நடிக்க வைப்பதாக கூறியிருந்தார் பிரபுசாலமன். அதனால் முதல் படம் திரைக்கு வரும்முன்பே இரண்டாவது படத்தில் கமிட்டாகி விட்ட மகிழ்ச்சியில் இருந்து வந்தார் கெளதம். மேலும், அடுத்த படத்துக்காக தனது உடல்கட்டையும் தயார்படுத்திக் கொண்டிருநதார். இந்த நிலையில், திடீரென்று ஒருநாள் கெளதம் எனது கதைக்கு பொருத்தமாக இருக்க மாட்டார். அதனால் வேறு நடிகரை வைத்து இயக்கப்போகிறேன் என்று தகவல் சொன்னாராம் பிரபுசாலமன்.
அதைக்கேட்டு, விக்ரம்பிரபுவுக்கு கொடுத்தது மாதிரி தனது மகனுக்கும் கும்கி மாதிரி ஒரு ஹிட் படத்தை பிரபுசாலமன் கொடுப்பார் என்று நம்பியிருந்த கார்த்திக் கடும் அதிர்ச்சிக்கு ஆளானாராம். இருப்பினும், மகன் இந்த பிரச்னையால் சோர்ந்துவிடக்கூடாதே என்பதறகாக அவசர அவசரமாக ஐஸ்வர்யா தனுஷ் , சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் ஆகியோர் இயக்கும் புதிய படங்களில் கெளதமை கதாநாயகனாக்கி விட்டார் கார்த்திக்.
அவரிடத்தில் திடீரென்று பிரபுசாலமன் இப்படியொரு முடிவு எடுக்க என்ன காரணம்? என்று கேட்டால், அரபு நாட்டில் வாழும் தமிழர்களில் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அப்படத்துக்கு கெளதம் பொருத்தமாக இருப்பார் என்றுதான் முதலில் சொன்னார். கடல் படத்தின் ரிலீஸ் வரை அப்படி சொன்னவர், இப்போது அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்கிறார். எங்களுக்குள் வேறு எந்த பிரச்னையும் கிடையாது. ஒருவேளை, கடல் படம் தோல்வி காரணமாககூட கெளதமை நடிக்க வைக்க யோசிக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று என்பதை நான் அறிவேன். முதல் படம் தோல்வியடைந்த எத்தனையோ நடிகர்கள் பின்னர் முன்னணி நடிகர்களாகியிருக்கிறார்கள். இதனால் இந்த செண்டிமென்ட் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார் கார்த்திக்.