ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி. தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனரும் அவர்தான். 1936ம் ஆண்டு "மிஸ்கமலா" என்ற படத்தை இயக்கினார். முதல் பெண் தயாரிப்பாளர், முதன் முதலில் தியேட்டர் கட்டிய பெண். இப்படி பல முகங்கள் அவருக்கு உண்டு. அவரைத் தொடர்ந்து பெண் இயக்குனர்கள் அவ்வப்போது வருவார்கள், வந்த வேகத்தில் சென்று விடுவார்கள். பெரிய அளவில் அவர்களால் சாதனை படைக்க முடியவில்லை. விஜயநிர்மலா தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 40 படங்கள் வரை இயக்கியதுதான் சாதனை அளவு. அவருக்கு அடுத்து ஜெயதேவி 21 படங்கள் இயக்கி உள்ளார். விஜயநிர்மலா கமர்ஷியல் படங்களை இயக்கினார், ஜெயதேவி சிறுபட்ஜெட் படங்களை இயக்கினார். கேமராஉமனாக இருந்த பி.ஆர்.விஜயலட்சுமி 14 படங்கள் வரை இயக்கி. அவற்றை வெற்றி பெறவும் வைத்தார். நடிகைகள் லட்சுமி, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, சுஹாசினி படங்கள் இயக்கினார்கள். இவர்கள் தவிர அவ்வப்போது சிலர் வருவார்கள், ஒரு படம் அல்லது இரு படம் இயக்குவார்கள் பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் இப்போது ஏராளமான பெண் இயக்குனர்கள் சினிமா களத்தில் நிற்கிறார்கள்.
நடிகையாக இருந்து இயக்குனரான ரேவதி "மித்ரு மை பிரண்ட்" என்ற படத்துக்காக தேசிய விருது பெற்றார். "பிகிர் மிலிங்கா" என்ற படத்தை இயக்கினார். இப்போது அமிதாப்பச்சன் நடிப்பில் ஒரு படம் இயக்க இருக்கிறார். வி.ப்ரியா கண்டநாள் முதல், கண்ணா மூச்சி ஏனடா படங்களை இயக்கினார். இப்போது அடுத்த படம் இயக்கும் முனைப்பில் இருக்கிறார். நந்தினி "திரு திரு துறு துறு" என்ற காமெடி படத்தை இயக்கினார். மதுமிதா கொலை கொலையா முந்திரிக்கா, வல்லமை தாராயோ படங்களை இயக்கினார்.
பெண் இயக்குனர்கள் காமெடி படங்களோ, குடும்ப படங்களோதான் இயக்குவார்கள் என்ற எண்ணத்தை இப்போதைய பெண் இயக்குனர்கள் உடைத்து எரிந்துள்ளார்கள். "துரோகி" என்ற ஆக்ஷன் படத்தை எடுத்து அதிர வைத்தார் சுதா கே.பிரசாத், வடசென்னை மக்களின் வாழ்க்கையை "வெப்பம்" படத்தில் பதிய வைத்தார் அஞ்சனா, "குளிர் 100 டிகிரி" என்ற திகில் படத்தை இயக்கினார் அனிதா உதுப். பைபோலோ டிசாடர் என்ற மனவியாதி பற்றி "ஆரோகணம்" படம் இயக்கி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த விலைமாதுகள் பற்றி "சிருங்காரம்" படம் எடுத்து விருதுகளை அள்ளினார் சாரதா ராமநாதன். 18 வயதில் இயக்குனரான சினேஹா பிரிட்டோ "சட்டம் ஒரு இருட்டறை" படத்தின் ரீமேக்கை இயக்கினார். காயத்ரி தன் கணவர் புஷ்கருடன் இணைந்து ஒரம்போ, வ குவார்ட்டர் கட்டிங் படங்களை இயக்கினார். இப்படி பெண்கள் சினிமாவின் அடுத்த தளத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக தங்களாலும் படம் இயக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
தற்போது நந்தினி "கொலை நோக்குப் பார்வை" என்ற திகில் படத்தை இயக்குகிறார். மதுமிதா இயக்குனர் கே.பாலச்சந்தர் பற்றிய படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். அம்பிகா மலையாளப் படம் ஒன்றை இயக்குகிறார். இதுவரை கவர்ச்சி நடிகையாக மட்டுமே அறியப்பட்ட ஷகிலா மலையாளத்தில் படம் இயக்கி வருகிறார். சாரதா ராமநாதன் அண்டர்கிரவுண்ட் குழந்தை கடத்தல் தாதாக்கள் பற்றி "புதிய திருப்பங்கள்" என்ற படத்தை இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி வருகிறார். லட்சுமி ராமகிருஷ்ணன் பெரிய ஹீரோக்கள் நடிக்க கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்க இருக்கிறார். இவர்கள் தவிர நடிகைகள் பத்மப்ரியா, சாயாசிங், பூ பார்வதி, தேவயானி, காவ்யா மாதவன், கமல் மகள் அக்ஷரா ஹாசன், பார்த்திபன் மகள் கீர்த்தனா, நாசர் மனைவி கமீலா நாசர் உள்ளிட்ட பலர் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சாதனை படைப்பதைப்போல தமிழ் சினிமாவிலும் அது நிகழப்போகிறது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் ஆட்சி நடக்கும் என்றே தோன்றுகிறது.