ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் எஸ்.ஏ.சி., கோஷ்டியினரும், கேயார் கோஷ்டியினரும் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு சென்றது. இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் அணியினர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர் கேயார் அணியினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துவிட்டு வந்த கேயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோர்ட் உத்தரவுக்கு பின்னரும் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது அணியினர் பதவி விலக மறுக்கின்றனர். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல். மேலும் வருகிற 24ம் தேதி சங்க பொதுக்குழுவையும் கூட்டியுள்ளனர். இதனை தடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி சங்கத்தில் இருந்து முக்கியமான 21 பைல்கள் காணாமல் போய் உள்ளது. இது கிரிமினல் குற்றம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.