ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சரண்ராஜை நினைவிருக்கிறதா? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தவர். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். கடைசியாக "கரிசல்மண்" என்ற படத்தில் ரீ-என்ட்ரியாகி அதிலும் ஹீரோவாக நடித்தார். "புதுசா இருக்கு" என்கிற படத்தில் நடிப்பதோடு, இசை அமைக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்தது. இரண்டு படங்களுமே ரிலீசாகவில்லை. அதன் பிறகு சரண்ராஜை சினிமாவிலோ, சினிமா நிகழ்ச்சிகளிலோ பார்க்க முடியவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் சரண்ராஜ் கடந்த சில வருடங்களாகவே கன்னட சினிமாவில் சரண்டர் ஆகிவிட்டார்.
கன்னடத்தில் அவர் இப்போது குறிப்பிடத்தக்க குணசித்திர நடிகர். பெங்களூர்காரரான சரண்ராஜுக்கு கன்னடம் தாய்மொழி என்பதால் அங்கு சென்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். கன்னடத்தில் முன்பு சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் "பிருத்திங்கதனா" என்ற படம் மூலமாக ரீ-என்ட்ரி ஆனார். அது ஹிட்டாகவே, தற்போது "தேவி", "சாரி கண்ணே" படங்களில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.