ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2023ம் ஆண்டிற்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்ப கட்டத்திலேயே விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் போட்டிகள் நடந்து வருகின்றன. தனது சொந்த மைதானத்தில் கடந்த வாரம் இந்த ஆண்டிற்கான முதல் போட்டியை சென்னை அணி விளையாடியது. அப்போது தனுஷ், சிவகார்த்திகேயன், வரலட்சுமி உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள், நடிகைகள் போட்டியைக் கண்டுகளித்தனர்.
நேற்று ராஜஸ்தான் அணியுடனான போட்டியை தனது சொந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடி தோல்வியுற்றது. நேற்றைய போட்டியையும் பல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு பார்த்தனர். விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர் தொகுதியைச் சேர்ந்த சிறுவர்களுடன் போட்டியைக் கண்டு ரசித்தார்.
நடிகை த்ரிஷா, பிந்து மாதவி, ஐஸ்வர்யா ராஜேஷ், மேகா ஆகாஷ், சதீஷ், ஹரிஷ் கல்யாண் நேற்றைய போட்டியைப் பார்த்தார்கள். ஐஸ்வர்யா அவரது 'சொப்பன சுந்தரி' குழுவினருடன் வந்திருந்தார்.
மலையாள நடிகர்களான ஜெயராம், பிஜு மேனன் ராஜஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய போட்டியை ரசித்தார்கள். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தான் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். கேரளாவுக்காக ஐபிஎல் அணி எதுவும் இல்லாதது குறிப்பிட வேண்டிய ஒன்று.