முத்தையா இயக்கத்தில் பிரபு, கார்த்திக் மகன்கள் | 'மகாராஜா' - விஜய் சேதுபதியின் 50வது படம் தந்த திருப்பம் | லண்டனில் படமாகும் டாக்சிக் | ‛சூரரைப்போற்று' ஹிந்தி ரீ-மேக்கான ‛சர்பிரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மீண்டும் கெட்ட வார்த்தை பேசி ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளான மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | அமீர்கான் மகனின் அறிமுக படத்திற்கு நீதிமன்றம் தடை | ரூ.90 லட்சம் மோசடி நடிகை ஷில்பா மீது வழக்கு | கமலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தலவன் படக்குழு | ரவீனாவுக்கு அடித்த ஜாக்பாட் | எதிர்நீச்சல் குழுவினருக்கு நினைவுப்பரிசு கொடுத்த திருசெல்வம் |
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடித்து கடந்து ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 1. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் வெளியான பொழுது சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக மணிரத்னம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மணிரத்னம் மீது அவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என்று மனுதாரருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.