மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பிரபாஸ், கிர்த்தி சனோன், சன்னி சிங், சைப் அலிகான் நடிக்கும் பான் இந்தியா படம் 'ஆதி புரூஷ்'. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை தொடர்ந்து இதன் புரமோஷன் பணிகளை நாளை முதல் தொடங்குகிறார்கள். இதை முன்னிட்டு தயாரிப்பாளர் பூஷண் குமார் இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்து பணிகளை தொடங்கி உள்ளனர். வைஷ்ணவி தேவி கோயிலில் நடந்து வரும் சைத்ர நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட இவர்கள் படத்தின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.
”வைஷ்ணவி தேவி எங்கள் குல தெய்வம். எந்த காரியத்தை தொடங்கினாலும் அவளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றே தொடங்குவோம். ஆதி புருஷ் படத்தின் பணிகளை அப்படியே தொடங்கி உள்ளோம். பெரும் வெற்றியை அவள் எங்களுக்கு தருவாள்” என்கிறார் தயாரிப்பாளர் பூஷண் குமார்.