திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
டாப்ஸிக்கும் பிரச்சினைகளுக்கும் பல ஜென்ம தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. அடிக்கடி சர்சையில் சிக்குவார். தொடர்ந்து கங்னா ரணவத்துடன் மோதிக் கொண்டிருப்பார். இந்த முறை அவர் இந்து கடவுளை அவமதித்து சிக்கலில் சிக்கி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸி கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். அவர் உடையை எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளட்டும், அரை குறை உடையுடன் கழுத்தில் பெண் கடவுள் லட்சுமி உருவம் பொறித்த நெக்லசையும் அணிந்திருந்தார்.
இது சர்ச்சையை கிளப்பியது. கவர்ச்சி உடையில் கடவுளின் உருவ நெக்லசை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். இந்த நிலையில் டாப்ஸி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து ரக்சக் சங்கதன் அமைப்பை சேர்ந்த எக்லவியா சிங் கவுர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில் “ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் டாப்ஸி கவர்ச்சியாக வந்து லட்சுமி தேவியின் உருவ நெக்லசை அணிந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.