நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் இதுவரை 11 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 கோடி ரூபாய் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இதைதொடர்ந்து தனது சம்பள பாக்கி 4 கோடியை தனக்கு தரக்கோரி சிவகார்த்திகேயன் தரப்பில் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பும் சமரசம் செய்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.