மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. 'வாரிசு' பட விழாவில் விஜய்யை சிலர் சூப்பர்ஸ்டார் என சொன்ன பிறகு அந்த சர்ச்சை அதிகமானது. அந்தப் படம் ஓடி முடிந்த பின்னும் இன்னமும் அவ்வப்போது அது புகைந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு '1947 ஆகஸ்ட் 16' பட டிரைலர் வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் உங்களிடம் ரஜினி சாயல் தெரிகிறதே என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு சிவகார்த்திகேயன், “கிட்டத்தட்ட 1000, 2000 மேடைகளில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி பண்ணியிருப்பேன். அதை நான் நன்றாகப் பண்ணுவேன்னும் சொல்வாங்க. அது எப்பவுமே என் மேல இருந்துட்டேயிருக்கும். அது பிளான் பண்ணிலாம் பண்றதில்ல. அது எப்பவுமே என்கிட்ட உண்டு, அது எனக்கு சந்தோஷம்தான்,” என்றார்.
சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வெளிவர உள்ள படத்தின் பெயர் 'மாவீரன்'. அப்பெயரில் ரஜினிகாந்த் நடித்து ஏற்கெனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தன்னிடம் ரஜினி சாயல் இருப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருப்பது மறைமுகமாக எதையோ சொல்ல வருவது போலவே உள்ளது.