ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2. இத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கனா ரணவாத், லட்சுமி மேனன், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்துவேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் வடிவேலுவை வாசு கடுமையான வார்த்தைகளில் திட்டினார் என செய்திகள் இணையதளங்களில் பரவின. இந்நிலையில் இதுபற்றி இப்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இருவருக்கும் எந்த மோதலும் ஏற்படவில்லை. மைசூர், ஐதராபாத், மும்பை உட்பட பல இடங்களில் நடந்த படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டார். 'சந்திரமுகி-2' படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார்கள்.