முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். தெலுங்கின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த்தின் இரண்டாவது மகன்.
அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2003ல் வெளிவந்த 'கங்கோத்ரி' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கின் பிரபலமான இயக்குனராக கே ராகவேந்திர ராவின் 100வது படம் அது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளிலும் அவருக்கென ரசிகர்களை வைத்துள்ளார். தற்போது 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
கதாநாயகனாக 20 வருடங்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, “இன்று, திரையுலகில் என்னுடைய 20 வருடங்களை நிறைவு செய்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும், அன்பால் நனைந்தவனாகவும் இருக்கிறேன். திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். ரசிகர்கள், பார்வையாளர்கள், அபிமானிகளால் தான் நான் இப்படி இருக்கிறேன். என்றென்றும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.