ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
யசோதா படத்தை அடுத்து தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து அவர் கூறுகையில், இந்த சாகுந்தலம் படத்தின் கதையை இயக்குனர் என்னிடத்தில் சொன்னபோது அதில் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். காரணம் சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு பயமாக இருந்தது. எனக்குள் அந்த கம்பீரம், தேஜஸ் இருக்காது என்று நினைத்தேன். என்றாலும் இயக்குனர் என்னை வற்புறுத்தி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதோடு எனது கதாபாத்திரம் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியாது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டாலும், அந்த கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்றும் நான் எனக்குள் ஒரு முடிவு செய்து கொள்வேன். என்னுடைய பயத்தை தாண்டி வெற்றி பெற முயற்சி செய்வேன். என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் இப்படித்தான் நான் செயல்பட்டு வந்திருக்கிறேன். ஒரு நடிகையாக எனது முன்னேற்றத்திற்கு காரணமே இந்த பயம்தான் என்றும் தெரிவித்திருக்கிறார் சமந்தா.