நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன்பிறகு துரோகி, ராட்சசன், கட்டா குஸ்தி உள்பட பல படங்களில் நடித்த தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை விவாகரத்து பெற்ற விஷ்ணு விஷால் பின்னர் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த பதிவில், ‛‛பரவாயில்லை, நான் மீண்டும் முயற்சி செய்தேன், தோற்றுவிட்டேன். மீண்டும் கற்றுக் கொண்டுள்ளேன்.என் தோல்வியோ என் தவறோ கிடையாது. அது ஒரு துரோகம் மற்றும் ஏமாற்றம்'' என குறிப்பிட்டார். ஆனால் பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இதையடுத்து இரண்டாவது மனைவியான ஜுவாலாவிற்கும் விஷ்ணு விஷாலுக்கும் பிரச்னை, இவரையும் பிரிகிறீர்களா விஷ்ணு என பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''எனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல, தொழில் சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு நாம் கொடுக்கும் கிப்ட் நம்பிக்கையே. ஆனால், தோற்கும்போது நாம் நம்மையே குறை கூறுகிறோம். அப்படி இருக்க தேவையில்லை. இதை தான் சொல்ல வந்தேன்'' என விளக்கமளித்துள்ளார் விஷ்ணு விஷால்.