ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன்பிறகு துரோகி, ராட்சசன், கட்டா குஸ்தி உள்பட பல படங்களில் நடித்த தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை விவாகரத்து பெற்ற விஷ்ணு விஷால் பின்னர் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த பதிவில், ‛‛பரவாயில்லை, நான் மீண்டும் முயற்சி செய்தேன், தோற்றுவிட்டேன். மீண்டும் கற்றுக் கொண்டுள்ளேன்.என் தோல்வியோ என் தவறோ கிடையாது. அது ஒரு துரோகம் மற்றும் ஏமாற்றம்'' என குறிப்பிட்டார். ஆனால் பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இதையடுத்து இரண்டாவது மனைவியான ஜுவாலாவிற்கும் விஷ்ணு விஷாலுக்கும் பிரச்னை, இவரையும் பிரிகிறீர்களா விஷ்ணு என பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''எனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல, தொழில் சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு நாம் கொடுக்கும் கிப்ட் நம்பிக்கையே. ஆனால், தோற்கும்போது நாம் நம்மையே குறை கூறுகிறோம். அப்படி இருக்க தேவையில்லை. இதை தான் சொல்ல வந்தேன்'' என விளக்கமளித்துள்ளார் விஷ்ணு விஷால்.