அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
பிக்பாஸ் சீசன் 4-ல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன்பிறகு அமைதியான பாலாஜி முருகதாஸை பலநாட்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அண்மையில், ஜோ மைக்கேல் ப்ரவீன் என்பவர் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் மீது பெண்ணை ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் சோஷியல் மீடியாக்களில் மீண்டும் கவனம் பெற்ற பாலாஜி முருகதாஸ் தற்போது டாஸ்மாக்கை மூடச்சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் போட்டுள்ளார். அந்த டுவீட்டானது வைரலாகி பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனையடுத்து மற்றொரு டுவீட்டை பதிவிட்டுள்ள பாலாஜி முருகதாஸ், 'தமிழ்நாட்டில் மதுவினால் என்னை போல் பல அநாதைகள் உருவாகியுள்ளனர். என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள். உங்களால் சமாளிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸின் இந்த டுவிட்டர் பதிவுகளை சிறுபிள்ளைத்தனம் என்றும் ஆர்வக்கோளாறு என்றும் அரசியல் வட்டாரத்தினர் விமர்சித்து வருகின்றனர்.