மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் இருந்து சென்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும், எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற டாக்குமெண்ட்ரி படமும் தலா ஒரு விருதை பெற்றன. இதில் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கான விருதை பெற்றுக்கொண்ட அந்த படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ் விழா மேடையில் பேசினார். ஆனால் கூடவே அருகில் நின்றிருந்த அந்த படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவிடம் மைக் இருந்தும் அவரை பேச விடாமல் மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் பேச முயற்சித்தும் மைக் வேலை செய்யாததால் அப்செட் ஆனார்.
தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ள குனீத் மோங்கா, “ஆஸ்கர் விழா மேடையில் பேசுவதற்காக முன்கூட்டியே என்னை தயார் படுத்தி வைத்திருந்தேன். விருதை பெற்றதும், இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஒரு இந்திய படத்திற்கு கிடைத்துள்ள விருது இதுதான் என்று பேச வேண்டும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் என் வசமிருந்த மைக் அணைக்கப்பட்டது. இருந்தாலும் நான் மீண்டும் அதே ஆஸ்கர் விழா மேடைக்கு செல்வேன்.. நான் பேச நினைத்ததை மீண்டும் பேசுவேன்..” என்று கிட்டத்தட்ட சூளுரைப்பது போலவே கூறியுள்ளார்.