மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழில் 'குக்கூ' திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. ஏற்கனவே இவர் 'செல்லுலாய்டு' என்ற மலையாள படத்தில் பாடல்கள் பாடி அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் படங்களில் பாடிய பிறகே பிரபலமானார்.
'வீரசிவாஜி' என்ற படத்தில் இவர் பாடிய 'சொப்பன சுந்தரி நான் தானே ... சொப்பன லோகத்தின் தேன் தானே' என்ற பாடலும், ஜெய்பீம் படத்தில் 'மண்ணிலே ஈரம் உண்டு முள் காட்டில் பூவும் உண்டு' என்ற பாடலும், தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த பாடலாகும். கடந்த ஆண்டு கேரள அரசின் கேரளஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
சமீபத்தில் கோவை வந்திருந்த வைக்கம் விஜயலட்சுமியை சந்தித்து பேசினோம்...
எந்த வயதில் பாட துவங்கினீர்கள்?
எனக்கு எல்லாமே சங்கீதம்தான். ஐந்து வயதில் கர்நாடக இசை கற்றுக்கொள்ள துவங்கினேன். அன்றில் இருந்து இசையை தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். காரணம் இசை கடல் போன்றது. அதை யாரும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது.
சமீபத்தில் நீங்கள் பாடிய புதிய படங்கள் பற்றி?
தமிழில் அரண்மனை 3, நீலகண்டா ஆகிய படங்களில் தமிழ், தெலுங்கு இரண்டிலும் பாடி இருக்கிறேன். மலையாளத்தில் மூன்று படங்களில் பாடி இருக்கிறேன். இன்னும் சில படங்கள் உள்ளன.
இன்னும் எந்த இசை அமைப்பாளர் இசையில் பாட விருப்பம்?
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பட வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. அவர்கள் இசையில் பாடும் நாள் எனக்கு இனிய நாளாக இருக்கும்.