சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் விநாயகன். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் வித்தியாசமான வசன உச்சரிப்புடன் தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது மனைவியிடம் இருந்து தான் பிரிந்து விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விநாயகன்.
இது குறித்து விநாயகன் அந்த வீடியோவில் கூறும்போது, “எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான அனைத்து திருமண உறவுகளும் சட்ட உறவுகளும் இந்த தருணத்தில் இருந்து முடிவுக்கு வருகின்றன” என்று கூறியுள்ளார். விநாயகனை பொறுத்தவரை, அவரது நடிப்பிற்காக பலராலும் பாராட்டப்பட்டாலும் பெரும்பாலும் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருப்பவர். கடந்து சில மாதங்களுக்கு முன்பு கூட பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் மரியாதை குறைவாக பேசி பின் அதற்காக மன்னிப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.