இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
மு .மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இணைந்து நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் கண்ணை நம்பாதே. இப்படத்தில் ஆத்மிகா, பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியான ஆத்மிகா, கண்ணை நம்பாதே படத்தை 90 வயதை கடந்த தனது தாத்தாவுடன் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். அதோடு தனது பேத்தி நடித்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டர் படிக்கட்டுகளில் அவர் ஆர்வமுடன் ஏறி வந்திருக்கிறார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள ஆத்மிகா, ‛‛90க்கும் அதிகமான வயது கொண்ட எனது தாத்தா, அவரது பேத்தி படத்தை பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் எனக்கு பொக்கிஷமாக இருக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார் ஆத்மிகா .