நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது. அதையடுத்து இப் படத்தின் டிரைலரும் வெளியானது. தற்போது பத்து தலை படத்தின் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிம்பு பேசும்போது, கவுதம் கார்த்திக்கிடம் எனக்கு பிடித்த பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆக்ஷன். இவர்கள் எல்லாம் எதற்காக ஆக்ஷன் பண்ணுகிறார்கள் என்று தோன்றலாம். ஆனால் ஒரு ஹீரோ பண்ணக்கூடிய ஆக்சன் எல்லோரையும் என்டர்டைன்மென்ட் பண்ணுவது ரொம்ப கடினமான விஷயம் . அது போன்ற கடினமான விஷயத்தை கவுதம் கார்த்திக் ரொம்ப சாதாரணமாக செய்கிறார். இந்த படத்தில் நடித்த போது அவருடைய அந்த ஆக்ஷனை நான் ரொம்பவே ரசித்தேன். அது எனக்குள் ஒரு வியப்பை ஏற்படுத்தியது என்று கவுதம் கார்த்திக்கின் நடிப்பை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் நடிகர் சிம்பு.