மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த 2021ல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தலைவி என்கிற படம் வெளியானது. இயக்குனர் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்திருந்தார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படம் உருவாகி வந்த சமயத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த படத்தை இந்திய அளவில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற ஜீ நிறுவனம் அதற்கான முன்தொகையாக 6 கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் வசம் செலுத்தி இருந்தனர். படம் எதிர்பார்த்த அளவில் வசூலாகாத நிலையில், கணக்கு வழக்குகளை ஒப்படைத்து தாங்கள் செலுத்திய ஆறு கோடி ரூபாயை திருப்பித் தருமாறு கடந்த ஒன்றரை வருடங்களாக கடிதம் மூலமாகவு,ம் மெயில் மூலமாகவும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டு வந்தனராம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வராததால் தற்போது இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.