மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஊட்டியைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் பொம்மன், பெல்லி என்ற தம்பதியர் ஆதரவற்ற யானைககளை வளர்ப்பதைப் பற்றிய டாகுமென்டரியாக அப்படம் உருவானது.
ஆஸ்கர் விருது வென்ற பின் கார்த்திகி சென்னை வந்தார். அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசை வழங்கினார் முதல்வர். மேலும் ஊக்கத்தொகையாக ஒரு கோடி ரூபாயையும் வழங்கினார்.
“ஊட்டியில் வளர்ந்து, நம் தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை #AcademyAwards வரை கொண்டு சென்ற #TheElephantWhisperers இயக்குநர் கார்த்திகி கொன்சால்வெஸ் அவர்களை பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.1 கோடி வழங்கினேன். முகம் தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு,” என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.