இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஊட்டியைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் பொம்மன், பெல்லி என்ற தம்பதியர் ஆதரவற்ற யானைககளை வளர்ப்பதைப் பற்றிய டாகுமென்டரியாக அப்படம் உருவானது.
ஆஸ்கர் விருது வென்ற பின் கார்த்திகி சென்னை வந்தார். அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசை வழங்கினார் முதல்வர். மேலும் ஊக்கத்தொகையாக ஒரு கோடி ரூபாயையும் வழங்கினார்.
“ஊட்டியில் வளர்ந்து, நம் தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை #AcademyAwards வரை கொண்டு சென்ற #TheElephantWhisperers இயக்குநர் கார்த்திகி கொன்சால்வெஸ் அவர்களை பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.1 கோடி வழங்கினேன். முகம் தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு,” என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.