இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
சில நாட்களுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் காலேவின் அழைப்பை ஏற்று, ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்தார்.
இந்த தகவல் வைரலானது. ஆனால் வெளியில் தெரியாத இன்னொரு தகவலும் உண்டு. அது இளம் கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது தான். தற்போது அந்த படங்களை வெளியிட்டிருப்பதால் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரஜினியை சந்தித்துள்ளனர். ரஜினியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, "ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தலைவர்" என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.
இதேபோல், வாஷிங்டன் சுந்தர், இன்ஸ்டாகிராமில் அவர் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது எப்டி இருக்கு" என்று பதிவிட்டுள்ளார்.