இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. விருது வாங்கிய பின் படக்குழுவினர் ஒவ்வொருவராக இந்தியா திரும்பினர்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காக நடன ஒத்திகை ஒன்று நடைபெற்று வருகிறது.
நடன இயக்குனர்கள் பிரபுதேவா, கணேஷ் ஆகியோர் அதைச் செய்து வருகிறார்கள். அதில் கலந்து கொள்ள வந்த ராம் சரண் முன் பிரபுதேவா, கணேஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி ராம் சரணுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.