இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வீஜே தீபிகா தனக்கு மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்த போது அவர் முகத்தில் அதிக பருக்கள் இருந்ததன் காரணமாக நீக்கப்பட்டார். அதன்பிறகு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி அண்மையில் சீரியலிலிருந்து திடீரென விலகினார். இதற்கிடையில் தீபிகாவும் முகத்திற்கு ட்ரீமெண்ட் எடுத்து சில சீரியல்கள், ஷார்ட் பிலிம்கள் என நடித்து வருகிறார். எனவே, தீபிகாவையே மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க வைத்துள்ளனர். தற்போது இழந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் நெகிழ்ச்சியாக வீஜே தீபிகா பதிவிட்டுள்ளார். அதில், 'ஒருபொருள் நம்மகிட்ட இல்லாதபோதுதான் அதோட வலி என்னனு நமக்கு புரியும். இப்போ அது திரும்ப கிடைச்சிருக்கு. அதோட அருமை எனக்கு நல்லாவே தெரியும்' என்று அதில் தெரிவித்துள்ளார்.