மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்திய திரைப்படமாக உருவான இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
உலகளவில் பல விருதுகளை குவித்து வந்த இந்த படம் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதையும் இந்தபாடல் வென்றது.
இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அப்டேட் ஒன்றை ராஜமவுலி கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும். விரைவில் இந்த படத்தின் பணிகளை தொடங்க முடிவெடுத்துள்ளேன். இசையமைப்பாளர் கீரவாணி சொன்ன ஒன்லைன் என்னை கவர்ந்துள்ளது. அதைப்பற்றி தந்தையிடம் கூறி கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். அவர் கதையை எழுதி முடித்த பிறகு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.