ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்திய திரைப்படமாக உருவான இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
உலகளவில் பல விருதுகளை குவித்து வந்த இந்த படம் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதையும் இந்தபாடல் வென்றது.
இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அப்டேட் ஒன்றை ராஜமவுலி கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும். விரைவில் இந்த படத்தின் பணிகளை தொடங்க முடிவெடுத்துள்ளேன். இசையமைப்பாளர் கீரவாணி சொன்ன ஒன்லைன் என்னை கவர்ந்துள்ளது. அதைப்பற்றி தந்தையிடம் கூறி கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். அவர் கதையை எழுதி முடித்த பிறகு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.