படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
சின்னத்திரை நடிகையான பரீனா ஆசாத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானார். பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பா கதாபாத்திரம் இவருக்கு அதிக புகழை தேடி தந்தது. இதன்மூலம் இவருக்கு சோஷியல் மீடியாவிலும் அதிக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பரீனா நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை திட்டிக்கொண்டும், இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என்று ஆர்டர் போட்டுக் கொண்டும் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு பரீனாவும் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒருநபர் பரீனா ஹராம்(தவறான செயல்) செய்வதாக குற்றம் சொல்லியிருந்தார். அதற்கு அவர் ஸ்டைலிலேயே, 'சோஷியல் மீடியாவில் இருப்பதும், டிவி சீரியல் பார்ப்பதும், செலிபிரேட்டிகளை பாலோ செய்து கேள்விகள் கேட்பதும் தான் முதலில் ஹராம் லிஸ்டில் வரும். முதலில் உங்கள் முதுகை கழுவுங்கள் பிறகு என்னை கேள்விகள் கேட்கலாம்' என தக்க பதிலடி கொடுத்து அனுப்பியுள்ளார்.