அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு நடித்த சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் ரஜினி கேரக்டரில் ராகவா லாரன்சும், ஜோதிகா கேரக்டரில் கங்கனாவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கங்கனா ரணவத் தனது போர்ஷனை நடித்து முடித்து படப்பிடிப்பு குழுவினருடன் விடைபெற்றுள்ளார்.
அவர் ராகவா லாரன்சுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: சந்திரமுகி 2 படத்தில் என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. இங்கு நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களுக்கு விடைகொடுக்கிறேன் என்பது கடினமாகத்தான் உள்ளது.
இத்தனை நாட்களில் இதுவரை நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டருன் புகைப்படமே எடுக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலும் நாங்கள் படத்தின் காஸ்ட்யூமிலேதான் இருப்போம். அதனால், இன்று படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னணி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் இன்று வெற்றிகரமான இயக்குநராக, நடனக்கலைஞராக, நடிகராக, நல்ல மனிதராக வலம் வருகிறார். அவருடன் பணிபுரிந்தது எனக்குப் பெருமை. உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி, என கூறியுள்ளார் கங்கனா.
“மிஸ் யூ கங்கனா மேடம்” என்ற கேக்கை வெட்டி இயக்குனர் பி.வாசு உள்ளிட்ட படக்குழுவினர் கங்கனாவை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.