நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
‛புது நெல்லு புது நாத்து' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவருமான சி.என்.ஜெய்குமார் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சென்னை, செனாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. பாரதிராஜா நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அவரது மகனும், நடிகருமான மனோஜ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர்கள் தாணு, சித்ரா லட்சுமணன், முரளி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். ஏ.சி சண்முகத்தின் உறவினர் ஜெய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.