நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
‛புது நெல்லு புது நாத்து' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாரதிராஜாவிடம் பல ஆண்டுகள் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவருமான சி.என்.ஜெய்குமார் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சென்னை, செனாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. பாரதிராஜா நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அவரது மகனும், நடிகருமான மனோஜ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர்கள் தாணு, சித்ரா லட்சுமணன், முரளி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். ஏ.சி சண்முகத்தின் உறவினர் ஜெய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.