ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
2012ம் ஆண்டு வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு சில பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் “மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன்” ஆகிய படங்கள் மட்டும்தான் குறிப்பிடத்தக்க விமர்சனங்களைப் பெற்ற படங்களாக அமைந்தது. மற்ற படங்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பைக் கூடப் பெறவில்லை.
உதயநிதி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான பின் வெளிவரும் படமாக நாளை(மார்ச் 17) வெளியாக உள்ள 'கண்ணை நம்பாதே' படம் இடம் பெற உள்ளது. இப்படத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளாக தயாரித்து வந்தனர். இப்படம் ஆரம்பமாகும் போது திமுக இளைஞரணி செயலாளராக மட்டுமே இருந்த உதயநிதி அதன்பின் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி, இப்படம் வெளியாகும் போது அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
ஒரு கிரைம் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் உதயநிதியுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல பேட்டிகளிலும் பங்கேற்றார். இந்தப் படத்தை அடுத்து உதயநிதி நடித்துள்ள கடைசி படமான 'மாமன்னன்' படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.