இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

இசை அமைப்பாளர்கள் மேடை இசை நிகழ்ச்சி நடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என பலரும் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துகிறார். ஹாரிஸ் ஜெயராஜும், வித்யாசாகரும் இசை நிகழ்ச்சி நடத்த கிளம்பி விட்டார்கள். இந்த நிலையில் ஜி.வி.பிரகாசும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறார். முதன் முறையாக தனது தனி மேடை இசை நிகழ்ச்சியை கோவையில் வருகிற மே மாதம் 27ம் தேதி அரங்கேற்றுகிறார். தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் உடன் பணியாற்றிய பாடகர், பாடகிகள் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.