படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
சமீபத்தில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது நிகழ்வில் இந்தியாவிலிருந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவிலும் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி படம் என்கிற பிரிவிலும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கியுள்ளார். முதுமலை யானைகள் பராமரிப்பு முகாமில் அனாதையாக வந்த ரகு மற்றும் பொம்மி என்கிற இரண்டு யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியரின் அர்ப்பணிப்பு உணர்வு, யானைகளிடம் அவர்கள் காட்டும் பாசம் ஆகியவை குறித்து உணர்வு பூர்வமாக இந்த டாக்குமென்டரி உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த ரகு மற்றும் பொம்மி என்கிற யானைகள் தற்போது முதுமலை அருகில் உள்ள தெப்பக்காடு என்கிற யானைகள் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த டாக்குமென்டரி படம் ஆஸ்கர் விருது பெற்றதை தொடர்ந்து இந்த யானைகளையும் இதை வளர்த்த பொம்மன் மற்றும் பெல்லி இருவரையும் பார்ப்பதற்காக தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தெப்பக்காடு பகுதியை தேடி வர ஆரம்பித்துள்ளனர். நிறைய வெளிநாட்டு பயணிகளும் கூட சமீபத்திய ஆஸ்கர் விருது அறிவிப்புக்கு பிறகு இந்த பகுதிக்கு அதிக அளவில் வருவதாக வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.