படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
95வது ஆஸ்கர் விருதில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை தமிழில் தயாரான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம் பெற்றது. தமிழகத்தில் உள்ள முதுமலை தேசியப்பூங்காவில் யானைகளை வளர்க்கும் தம்பதிகளான பொம்மன், பெல்லி ஆகியோர் அந்த டாகுமென்டரியில் இடம் பெற்றிருந்தார்கள். அனாதையாக வந்த யானைக்குட்டிகளை அந்தத் தம்பதியினர் எப்படி வளர்க்கிறார்கள் என்பது பற்றியதுதான் அந்த டாகுமென்டரி படம்.
பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த டாகுமென்டரியில் நடித்திருந்த பொம்மன், பெல்லி இருவரும் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை இன்று(மார்ச் 15) சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் முக ஸ்டாலின். அதோடு இருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தார். அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.