வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

பாகுபலி படம் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா. சமீப காலமாக பிரபல ஹீரோக்கள் வெப்சீரிஸ்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ள நிலையில் நடிகர் ராணாவும் முதன் முறையாக ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
நிஜத்தில் இவரது சித்தப்பாவான நடிகர் வெங்கடேஷ், இந்த வெப்சீரிஸில் ராணாவின் தந்தையாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ போராட்டத்தை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. சமீபத்தில் எட்டு எபிசோடுகளாக வெளியான இந்த வெப்சீரிஸுக்கு ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் பொதுவான நெட்டிசன்கள் பலரிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் தான் அதிகம் வெளியாகின.
காரணம் இந்த இந்த வெப்சீரிஸில் ராணாவும் சரி.. வெங்கடேஷும் சரி, பல இடங்களில் சரளமாக கெட்ட வார்த்தைகளை பேசியுள்ளனர். இதன் புரமோஷன் நிகழ்ச்சியின்போதே கூட நடிகர் ராணா இது பற்றி கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்த வெப்சீரிஸ் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களே ஒரு கட்டத்தில் இந்த வார்த்தைகளை கேட்டு எரிச்சல் அடையும் விதமாக ஓவர் டோஸ் ஆக மாறிவிட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு, நடிகர் ராணா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “இந்த வெப்சீரிஸை ஆதரித்தவர்களுக்கு நன்றி.. இதை வெறுப்பவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.




