ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முக்கியமான ஒரு விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற முடிந்தது. 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் வென்றது.
இந்தத் தலைமுறையினருக்கு ஆஸ்கர் விருதுகள் பற்றி அதிகம் தெரியக் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். 2009ம் ஆண்டு நடைபெற்ற 81வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜனல் பாடல் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை அவர் இசையமைத்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காகப் பெற்றார். 'ஜெய் ஹோ' பாடலுக்காக ரஹ்மான் பெற்ற அந்த விருது, பாடலை எழுதிய குல்சாருக்கும் கிடைத்தது. அதே படத்திற்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்கிற்காக ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருதை இயான் டாப், ரிச்சர்ட் ப்ரிக்கி ஆகியோருடன் இணைந்து பெற்றார்.
அதற்கு முன்பு 1992ம் ஆண்டு நடைபெற்ற 64வது ஆஸ்கர்விருது விழாவில், பெங்காலி இயக்குனர் சத்யஜித் ரே-க்கு, கௌரவ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
1982ம் ஆண்டு 'காந்தி' படத்திற்காக பானு அத்தையா சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
இந்த வருடம் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள் இந்தியத் திரைப்படத் தயாரிப்புகள். இதற்கு முன்பு கிடைத்த விருதுகள் வெளிநாட்டுத் தயாரிப்புகள் ஆகும். அதுதான் இந்த வருட ஆஸ்கர் விருதுக்கான சிறப்பம்சம்.