மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில படங்களில் நடித்தும், ஆடியும் இருக்கிறார். இதனால் கேரளாவில் நடக்கும் கடை திறப்பு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இதற்கான கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளவார்.
அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் மோசடி செய்து விட்டதாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சன்னி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனக்கு எதிராக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சன்னிலியோன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது “மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. எனவே வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய இருக்கிறது. எனவே சரியான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்காவிட்டால் சன்னிலியோனை மனுதாரர் தரப்பு துன்புறுத்துகிறது என்று பொருள். இதனால் அவர் கிரிமினல் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்யும்” என்று கூறி வழக்கை வருகிற 31ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.