இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமாகி உள்ளார். இவர் நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் ஏப்.,14ல் வெளியாகிறது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா உடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது வீட்டில் உள்ள லிங்க பைரவி முன் அமர்ந்து வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர், 'சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. நம்பிக்கை உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும், நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் நண்பராகவும் மாற்றும். மொத்தத்தில் நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும்' என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவுக்கு பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.