பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சஞ்சய் தத், விஜய் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தற்போது மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனியும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய், சஞ்சய்தத் ஆகியோருடன் பாபு ஆண்டனியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில், தான் இணைந்துள்ளது குறித்து நடிகர் பாபு ஆண்டனியே அறிவித்துள்ளதுடன் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக டில்லி ஏர்போர்ட்டில் தான் இறங்கிய போது பிரபல கால்பந்து வீரரும் நடிகருமான ஐ எம் விஜயனை சந்தித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக தமிழில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.