ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
கன்னட திரை உலகில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் கிச்சா சுதீப், சமீப காலமாக ஒரு பான் இந்திய நடிகராகவே மாறிவிட்டார். இந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள கப்ஜா என்கிற படத்தில் வில்லனாக நடித்துள்ளார் சுதீப். கன்னட சினிமாவின் அதிரடி ஹீரோவான உபேந்திரா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஈகா மற்றும் சல்மான் கான் நடித்த தபாங் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்த சுதீப் கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு மூன்றாவது முறையாக வில்லனாக நடித்துள்ளார்.
வரும் மார்ச்-17ல் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சுதீப் பேசியபோது, “பத்து வருடங்களுக்கு முன் எனக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தபோது வில்லன், ஹீரோ என பிரித்து பார்க்கவில்லை. அந்த சமயத்தில் சல்மான் கானிடமும் அடி வாங்கினேன்.. ஈகா படத்தில் ஒரு ஈயிடமும் அடி வாங்கினேன். ஆனால் ரசிகர்கள் இரண்டு விதமான வில்லன் கதாபாத்திரங்களையும் ரசித்ததாக கூறினார்கள். இன்றைய சூழலில் ஹீரோவோ அல்லது வில்லனோ எதுவாக இருந்தாலும் எல்லோரும் கூட்டணி சேரும் தருணம் இது” என்று கூறியுள்ளார்.