மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகர் ராம் சரணின் 15வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அரசியல் கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக வெளியாக உள்ளது. அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 20ம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராம்சரண், கியாரா அத்வானி வைத்து ஒரு பாடலை பிரமாண்டமாக படமாக்க ஷங்கர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்காக கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா இயக்கத்தில் ஐதராபாத்தில் பிரமாண்ட செட் தயாராகி வருகிறது. இப்பாடல் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் பட பாணியில் இந்த பாடல் கலக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் பாடலின் படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாம்.
படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை வரும் மார்ச் 27ம் தேதி ராம்சரண் பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.