நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் இயக்கி உள்ள பட 'கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். கமல்ஹாசன் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான், தயாரிப்பாளர் டி.துரை வீரசக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியல் கமல், தங்கர் பச்சானிடம் பேசும்போது “தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள்” என்றார். மேலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி.துரை வீரசக்திக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.