புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரில் ஆல்யா மானசாவுக்கு பின் ரியா விஸ்வநாதன் ஹீரோயினாக நடித்து வந்தார். போலீஸ் ஐபிஎஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஹைட் அண்ட் வெயிட்டுடன் இருந்த ரியாவை சில தினங்களுக்கு முன் சீரியலை விட்டு திடீரென நீக்கிவிட்டனர். இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பதிவுகளில் 'இனி நான் சந்தியா இல்லை' என்று அறிவித்திருந்த ரியா, சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்தும் சில பேட்டிகளில் கூறியிருந்தார். இதனால் ரியா விஸ்வநாத் கேரியர் என்னவாகும்? அவர் தொடர்ந்து நடிப்பாரா? என ரசிகர்கள் ஐயமுற்றனர்.
இந்நிலையில், ரியா விஸ்வநாத் ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் 'சண்டைக்கோழி' தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஒரு சேனல் தன்னை சீரியலை விட்டு நீக்கிய சில நாட்களிலேயே மற்றொரு சேனலின் புது சீரியலில் ஹீரோயினாக கமிட்டாகி ரியா கெத்து காட்டியுள்ளார். இந்த மகிழ்ச்சியை ரியாவின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.