மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
‛செம்பருத்தி' தொடரின் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு பரிட்சயமானவர் நடிகை பத்ரா நாயுடு. 2020ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் கர்ப்பமானார். அப்போது கொரோனா காலக்கட்டம் என்பதாலும், சீரியலில் பிசியாக நடித்து வந்ததாலும் உடம்பை சரிவர கவனிக்காததால் பரதா நாயுடுவுக்கு அபார்ஷன் ஆனது. அந்த சோகத்திலிருந்து மீண்டு வந்த பரதா நாயுடு தாலாட்டு தொடரிலும், ஜீ தமிழில் ரெட்டை ரோஜா தொடரிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் பரதாநாயுடு மீண்டும் கருவுற்றிருந்த நிலையில், தாலாட்டு சீரியல் குழுவினர் அவரை சீரியலை விட்டு நீக்கியுள்ளனர். இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள பரதாநாயுடு, 'ரெட்டை ரோஜா தொடரில் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் அந்த சீரியலை விட்டு விலகதான் முதலில் முடிவு செய்திருந்தேன். கர்ப்பமாக இருப்பதை சொன்னால் தாலாட்டு சீரியல் குழுவினர் உதவியாக நடந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால், கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்ன பத்து நாட்களில் தாலாட்டு சீரியலிலிருந்து என் கதாபாத்திரத்தையே நீக்கிவிட்டனர். கடைசியில் எந்த சீரியலை விட்டு விலக நினைத்தேனோ அந்த ரெட்டை ரோஜா சீரியல் குழுவினர் தான் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர்' என்று கூறியுள்ளார். 8 மாதம் வரை சீரியலில் நடித்து வந்த பரதாநாயுடுக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தற்போது 9 மாத நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது.